நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – ஒருவரின் கை துண்டிப்பு – வீடு தீக்கிரை
யாழ்ப்பாணம் கோண்டாவிலிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், கார், முச்சக்கர வண்டி என்பனவற்றிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கும் அதிகமானவர்களைக் கொண்ட வன்முறைக் கும்பல் வாகனங்கள் உள்ளடங்களாக பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தி, வீடொன்றினுள் புகுந்து சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன், நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.