5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.செல்வதுரை குமாரவேல் (குமார்) 06/09/2020
தாயகத்தில் கொக்குவில்லை பிறப்பிடமாகவும் ஜேர்மனி சுட்காட் ரொயிட் லிங்கனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்வதுரை குமாரவேல் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயரான இவர் அரசியல் சமூக மேடையில் கலந்து கொண்டு சொற்போரை நடத்துபவர்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் 6ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்னாரை அன்பு மனைவி தியாகேஸ்வரி, அன்பு பிள்ளைகள் அருணி , சுமன் மற்றும் மருமக்கள் , பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வேளையில் நினைவு கூருகின்றனர்.
அமரர் குமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாளில் தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர்
திருமதி புஸ்பவதி சிவநாதன் (லண்டன்) மற்றும் அன்பு நேயர்கள்
இவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.