கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
மேலும், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றியோர் என அடையாளம் காணப்பட்டுள்ள 159 பேரில் 129 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி, ஐந்து பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.