Main Menu

ரஷ்யா – உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ‘மைல்கல்’ நிகழ்வு

உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்த ரஷ்யா – உக்ரைன் இடையிலான கைதிகள் பரிமாற்றம் நிகழும் தருணம் நெருங்கியுள்ளது.

உக்ரைன் கைதிகளை ஏற்றிய பஸ் ஒன்று மொஸ்கோ நோக்கி பயணித்துள்ளதாக ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மொஸ்கோவில் இருந்து கைதிகளை ஏற்றிய விமானம் உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி பயணிக்கவுள்ளது.

2014 ஆம் ஆண்டு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான ஒருவர் உள்ளிட்ட 24 உக்ரைனிய மாலுமிகள் முதல் கட்டமாக அனுப்பப்படவுள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை குறைக்கும் வகையிலேயே இந்த கைதிகள் பரிமாற்றம் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெறுகின்றது.

இந்நிலையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என பலரும் சிலாகித்து வருகின்றனர்.

பகிரவும்...