Main Menu

சீன நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதுடன், 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீனாவின் குயிஸ்ஹோ மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் என்ற கிராமத்தில் கடந்த 23ஆம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன்போது 21 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்களினால் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையிலேயே தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...