3வது ஆண்டு நினைவுதினம் – அமரர். கைலாசபிள்ளை ஜெயக்குமார் (05/01/2023)
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலியை 5ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை இன்று இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள்.
அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர் (மலர்) பிள்ளைகள் புஷ்பராணி (பேபி) தெய்வலதா (பவா) பிரேமலதா (குட்டி) மருமக்கள் சிவகுமார் (சிவா) சுப்பிரமணி, லோகராசா (ரவி) பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலக்சன், சாகிசன், சாபிசா, சாதுசா, சசிகரன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இன்றைய தினம் நினைவு கூருகின்றனர்.
இன்று 3ம் ஆண்டில் நினைவு கூரப்படும் கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் பேபி சிவா குடும்பத்தினர்
அவர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆண்டுகள் மூன்று ஓடி மறைந்தாலும்
அப்பாவின் அன்பான நினைவுகள் மறைவதில்லை!
மடியில் அமர்த்தி மகிழ்வாய்
சோறு ஊட்டியதை மறக்க முடியுமா?
கரம் கோர்த்து கல்லூரிக்கு அழைத்து
சென்றதை மறக்க முடியுமா?
நல்லாசிரியராய் இருந்து நன்மை தீமை
சொல்லியதை மறக்கமுடியுமா?
நல்ல நண்பனாய் இருந்து நன்மைகள்
செய்ததை மறக்க முடியுமா?
கண்ணுக்கு அழகான கணவனை கரம்
பற்ற வைத்ததை சொல்லவா
அப்பா உங்களை பற்றி ஆயிரம் சொல்லலாம்
இப்படி பல செய்து எங்கள் இதயத்தில்
இடம் பிடித்த அப்பா!
எங்கு சென்றீர்கள் எங்களை விட்டு
இனி எப்பிறப்பில் காண்போம் உங்களை
இன்னொரு பிறவி இருந்தால் எங்கள்
அப்பாவே வர வேண்டும்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம்சாந்தி!