Main Menu

25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு

25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

திறைசேரி நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்த நிலையில் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...