Day: July 19, 2021
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்!
சமூக தொடர்பு தொடர்பான பெரும்பாலான சட்ட கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் டுவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ‘இங்கிலாந்தின் கட்டுப்பாடுகள் தளர்வு வரைபடத்தின் இறுதி கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கானமேலும் படிக்க...
பரிஸ் உட்பட – நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு
நாட்டின் பல நகரங்களில் கொரோனா தொற்று வீதம் திடீரென அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 100.000 பேரிலும் 50 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 இல் இருண்டு 37 ஆக அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேர PCR பரிசோதனை முடிவுகளின் படி,மேலும் படிக்க...
இணைய தளமூடாக போலி Pass Sanitaire விநியோகம்
இணையத்தளமூடாக போலியான சுகாதார பாஸ் (pass sanitaire) விநியோகம் இடம்பெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். முதல்கட்டமாக 6 பேர் கொண்ட குழு ஒன்றை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். Lyon, Val-de-Marne மற்றும் Yvelines மாவட்டங்களில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஸ்னாப்சாட் சமூகவலைத்தளமூடாகமேலும் படிக்க...
ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : இறப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்வு
மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டும் சுமார் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
மேற்கு ஐரோப்பா வெள்ளம்: ஏறக்குறைய 200பேர் உயிரிழப்பு- நூற்றுக் கணக்கானோரை காணவில்லை!
மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜேர்மனியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் ரைன்லேண்ட்-பலட்டினேட் ஆகும். அங்கு பேரழிவுகரமானமேலும் படிக்க...
ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத்மேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து, மத்தியமேலும் படிக்க...
ஏழுபேரின் விடுதலை குறித்து நடவடிக்கை – ஸ்டாலின் அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசியப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப்மேலும் படிக்க...
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டம்!
எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரிய போராட்டமொன்றும் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக இன்று நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் – சட்டத்தரணி சுகாஸ்
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...