Main Menu

2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்

2020-ம் ஆண்டுக்கான டி20 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும்.

கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்ட ஆசிய கோப்பையை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் – இந்தியா இடையில் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்து வருவதால் போட்டி இந்தியாவில் நடத்தப்படாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தத் தொடர் கருதப்படுகிறது.

பகிரவும்...