Main Menu

தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து தமிழக மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், உள்ளுராட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கும் போது, உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதற்கான சரியான முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக தி.மு.க பொருளாளர் துறைமுருகன் விமர்சித்துள்ளார்.

பகிரவும்...