Day: May 8, 2019
பிரித்தானியா, ஜேர்மனி இடையிலான உறவுகள் தொடரவேண்டும் – இளவரசர் சார்லஸ்
பிரெக்சிட்டின் விளைவுகள் என்னவாக இருந்தாலும் பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் தொடரவேண்டும், தொடரும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய இளவரசர் சார்லஸ். பெர்லினில் பிரித்தானிய தூதுவரின் வீட்டில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் ஜேர்மனி பிரித்தானியாவின் இயற்கைக் கூட்டாளி என்றார்மேலும் படிக்க...
2019ஏப்ரல் மாதம் இறுதிவரை சுமார் 299 பனிச்சரிவு; சுமார் 19 பேர் பலி!
சுவிச்சர்லாந்தில் இவ்வாண்டு குளிர்காலத்தில் ஏப்ரல் மாதம் இறுதிவரை சுமார் 299 பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பனிச்சரிவில் சிக்கி சுமார் 19 பேர் பலியாகியுள்ளதாக பனி மற்றும் பனிச்சரிவு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, 2018-19 ஆம்மேலும் படிக்க...
தகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அதிகாரம்
தகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாரிய அதிகாரம் கிடைத்திருப்பதாக ஊடக துறை அபிவிருத்தி மற்றும் திட்ட பணிப்பாளரும் தகவல்களை அறிந்துக்கொள்ளும் திட்ட அலுவலகத்தின் பணிப்பாளர் சுகத் கிட் சிறி தெரிவித்துள்ளார். இன்று காலை அம்பாறை பதியத்தலாவ பிரதேச செயலாளர்மேலும் படிக்க...
பௌத்த தேரர்களுக்கு சுகாதார காப்புறுதிக்கு 900 மில்லியன் ரூபா நிதி
பௌத்த தேரர்களுக்காக புத்த சாசன அமைச்சினால் காப்புறுதி திட்டம் ஒன்று இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேரர்களின் சுகாதார காப்புறுதிக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த காப்புறுதி திட்டம் தயாரிக்கபட்டிருப்பதாக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினமேலும் படிக்க...
மருத்துவரின் வெள்ளை மேலாடையில் எவ்வளவு கிருமிகள்- ஆய்வு அறிக்கை
மருத்துவருக்கு இருக்கும் தனி அடையாளம் அவரது வெள்ளை மேலாடை. மருத்துவரின் உன்னதமான பணியை வெளிப்படுத்தும் குறியீடாக அதனைப் பார்ப்போரும் உண்டு. மருத்துவர் வெள்ளை மேலாடை அணிவதுதான் சிறப்பு என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அந்த வெள்ளை மேலாடையில் ஏராளமான பாக்டீரியாக்களும், நுண்ணுயிர்க்மேலும் படிக்க...
Facebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்?
Facebookஇல் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளைச் சல்லடை போட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கின்றன உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள். அத்தகைய நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள விப்ரோ. அதில் பணிபுரியும் சுமார் 260 ஊழியர்கள் நாள்தோறும் படங்கள், காணொளிகள்,மேலும் படிக்க...
இளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம்
பிரிட்டிஷ் இளவரசர் ஹரி , அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர். விண்ட்சர் அரண்மனையில் ஊடகத் துறையினரைத் தங்கள் தவப்புதல்வருடன் அவர்கள் சந்தித்தனர். பிள்ளை பெற்றது ஒரு கனவுலக நிகழ்ச்சிபோல் தோன்றுவதாக அவர்கள்மேலும் படிக்க...
மாளிகாவத்தையில் 58 வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
மாளிகாவத்தை பிரதேசத்தில் கிணற்றொன்றில் இருந்து சீன வாள்கள் உள்ளிட்ட 58 வாள்கள் மற்றும் மேலும் சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை சுழியோடிகளை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகமேலும் படிக்க...
அமெரிக்காவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவில் கொலராடோ பிராந்தியத்தில் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்து இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!
இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில்மேலும் படிக்க...
ஜாமீன் முடிந்ததும் பேரணியாக மீண்டும் ஜெயிலுக்கு திரும்பிய நவாஸ் செரீப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்மேலும் படிக்க...
சென்னையில் குடிநீர் பஞ்சம் – லாரி தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் தவிப்பு
பருவமழை பொய்த்ததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், லாரி தண்ணீர் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். #DrinkingWater சென்னை: பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கிறது. கடந்த ஆண்டுமேலும் படிக்க...
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு- 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.மேலும் படிக்க...
வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்குமேலும் படிக்க...
அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 8பேர் காயம்
அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள டென்வர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உள்ளு}ர்நேரப்படி நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 8 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
றோகண விஜயவீரவின் படத்தை வைத்திருப்பவர்கள் எவரும் கைதுசெய்யப்படுவதில்லை…
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்வும் அதனை ஜனாதிபதிமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள் ,மேலும் படிக்க...
சிறிலங்கா வான்பரப்பில், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை!
தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார். ”சிறிலங்கா வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் பறக்கமேலும் படிக்க...
அம்பாந் தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது!
காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்மேலும் படிக்க...
உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவைமேலும் படிக்க...