Main Menu

2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.முருகேசு சின்னத்தம்பி

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.முருகேசு சின்னத்தம்பி அவர்களின் 2வது ஆண்டு நினைவு தினம் 23ம் திகதி
ஜுலை மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது

அமரர் முருகேசு சின்னத்தம்பி அவர்களின் 2வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூருபவர்கள் : அன்பு மனைவி சின்னமணி, பிள்ளைகள் சிவகுமார் (பிரான்ஸ்) உதயகுமார் (தாயகம் ) மணி மலர் (அமெரிக்கா) நேசமலர் (பிரான்ஸ்) மருமக்கள் பேபி சிவா (தமிழ் ஒலி நேயர் பிரான்ஸ்) தர்ஷினி (தாயகம்) செல்லத்துரை (அமெரிக்கா) சுரேஷ் கண்ணா (பிரான்ஸ்) பேரப்பிள்ளைகள் அஸ்வின் (பிரான்ஸ்) அலெஸ்சன் (பிரான்ஸ்) கயன்சிக்கா (அமெரிக்கா) லெனுசா (தாயகம்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோர்.

2வது ஆண்டை நினைவு கூரும் முருகேசு சின்னத்தம்பியை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகிறார்கள்
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வான் அலைக்கு எடுத்து வருகின்றார்கள் பேபி சிவா குடும்பத்தினர் அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகள்

ஈராண்டு நினைவலைகள்

ஆண்டுகள் இரண்டு
ஆனாலும் என்ன
நீங்காத நினைவுகள்
நிஜமாக நிறைந்திருக்கும்
காலங்கள் பிரிவின்
காயத்தை ஆற்றலாம்
பிரிவின் வலிகள்
என்றும்பிரிந்திடாமல்
எம் முடன்
உடலும் உயிரும்மறையலாம்
உங்கள் அன்பு என்றும் மறையாது
பூவில் உறையும் தேனினை போல
எங்கள் உள்ளமதில்
உங்கள் நினைவுகளாய்
வாழும் காலங்களில்
பாசத் தந்தையாக
பொறுப்புள்ள தலைமகனாக
பண்பு மிகு சேவையாளனாக
வாழ்ந்து மறைந்தீர்கள்
வீசும் காற்றிலும்
மலரின் மணத்திலும்
எம்முடன் நீங்கள்
கலந்திருப்பதாக எண்ணி வாழ்கிறோம்!

பகிரவும்...