Main Menu

17ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி.செல்லம்மா பொன்னையா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லம்மா பொன்னையா அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 10ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அமரர் செல்லம்மா பொன்னையா அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நாளில் அன்னாரை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் இராசேந்திரம், ராசலட்சுமி, விஜயலட்சுமி, வரதலட்சுமி, குலேந்திரராஜா, தனலட்சுமி, சுலோசனா தேவி, மற்றும் மருமக்கள் லோகேஷ், குலசேகரம், மகேந்திரலிங்கம், பாலசுப்ரமணியம், விஜயராணி, தனராஜ், இராசலிங்கம் அன்னாரை நினைவுகூரும் சகோதரர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியம் மலேசியா, தர்மலிங்கம், ராசம்மா சுவிஸ் , வீரசிங்கம், சிவபாக்கியம் வவுனியா, செல்வஜோதி வவுனியா, சொக்கலிங்கம் சரஸ்வதி பிரான்ஸ் , மாயவர் தனபாக்கியம் சுழிபுரம், மற்றும் சகோதரர்கள் மச்சான்மார், மச்சாள்மார், பேரப்பிள்ளைகள் செல்வமலர், செல்வராசா, சத்தியவதி, சர்வேஸ்வரி, சத்தியசீலன், மோகனதாஸ், சுரேந்தினி, மயூரன், மதன், தர்ஷன், நிரோஷன், றஜீபனா, அபிஷேக், வேணி, கோபு, பேபி, கௌதம், சைனிகா, கௌமிகா, தாரணி, ஜீவகலா, கபிலன், டிசாந்தினி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல வடக்கம்பரை முத்துமாரி அம்மனின் அருளோடு நினைவு கூருகின்றனர்.

இன்று 17 வது நினைவு நாளில் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் அமரர் செல்லம்மா பொன்னையா அவர்களை தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் நினைவு கூருகிறார்கள்.

அமரர் செல்லம்மா பொன்னையாவின் 17வது ஆண்டு நினைவஞ்சலியை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் தேவி தனராஜ் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்!

அம்மா உனக்கோர் அஞ்சலி

முதலில் மொழியை கற்றுக் கொடுத்தவளுக்கு அஞ்சலி
தந்தையை இழந்தும்,
தந்தையாய் ஆசானாய் நண்பனாய்
ஆயிரம் நெறிகளை
பக்குவமாய் சொல்லி தந்தவளே! – என் அம்மா
17 ஆண்டுகள் சென்றாலும் – என்றும்
எம் கண்கள் உங்களைத் தேடி தவிக்கிறது!
மீண்டும் பிறப்பொன்று இருந்தால் – நீயே
என் தாயாக வரவேண்டும்…
உம் மடியில் தலைவைத்து உறங்க வேண்டும் தாயே!

பகிரவும்...