Main Menu

1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். முருகேசு சின்னத்தம்பி அவர்கள்

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சின்னத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்னாரை, அன்பு மனைவி சின்னமணி

அன்பு பிள்ளைகள் சிவகுமார் (பிரான்ஸ்), உதயகுமார் (இலங்கை), மணிமலர் (ஐக்கிய அமெரிக்கா), நேசமலர் (பிரான்ஸ்)

அன்பு மருமக்கள் பேபி (பிரான்ஸ்), தர்சினி (இலங்கை), செல்லத்துரை (ஐக்கிய அமெரிக்கா), சறோஸ் கண்ணா (பிரான்ஸ்)

மற்றும் பேரப்பிள்ளைகள் அஸ்லீன், அலெக்சன் (பிரான்ஸ்), கயன்சிக்கா (ஐக்கிய அமெரிக்கா), வெனுசா (இலங்கை) ஆகியோர் நினைவு கூருகின்றனர்.

ஓராண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும் – உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!

அப்பா எங்கள் இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!

இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திரு.திருமதி. சிவா பேபி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்

அன்னாரின் நினைவாஞ்சலியில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து கொள்கிறோம்.

பகிரவும்...