Main Menu

ஸ்கொட்லாந்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது!

ஸ்கொட்லாந்தில் இயங்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாக ஸ்காட்ரயில் (ScotRail) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சாதாரண சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்லா வழித்தடங்களிலும் மீண்டும் அதிகாலை, இரவு மற்றும் பயன்பாடு அதிகம் உள்ள நேரங்களில் சேவைகள் இருக்கும்.
இருப்பினும், சமூக இடப்பெயர்வை அனுமதிக்க பல இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் 11ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக சேவைகளின் அதிகரிப்பு வந்துள்ளது. இதன்மூலம் பயணிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கிறது.

பகிரவும்...