Main Menu

வேட்பாளர்களின் நெறி முறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள், நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பு வெளியான திகதி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை குறித்த நெறிமுறைகள் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தல் தொடர்பான மற்றொரு வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...