Main Menu

வெள்ள நீரால் பாரிய சிரமத்தை எதிர்நோக்கும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.
இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் ,கண்டாவளை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அதேநேரம், அந்த பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
அத்துடன் வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் குறுக்கரத்து பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே அந்த வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares