Main Menu

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப் பட்டவர்களின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் கனகேந்திராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...