Main Menu

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறிமலை கைதுகள் தொடர்பில் தமிழ் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன .

கைதுசெய்யப்பட்டுள்ள எட்டுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 போலிகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவி;த்தனர்.

மக்கள் தங்கள் மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜி;த் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை இது குறித்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தலையிடமுடியாது கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்செய்யவேண்டும் நீதிமன்றமே அவர்களை விடுதலை செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...