Main Menu

விரைவில் புதிய அரசியல் சக்தி உருவாகும்

அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார் என்றும் அது அவர்கள் செய்யப்போகும் பெரிய தவறு என்றும் குறிப்பிட்டார்.

அவர்கள் அரசியலை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது, செய்த தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அவர்களது அரசியல் இல்லாமல் போய்விடும் என கூறினார்.

பகிரவும்...