Main Menu

விரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலைத் தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது என்றும் எனினும் சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜுன் மாதம் முதலாம் திகதியான இன்றைய வாக்காளர் தினம் தொடர்பாகவும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பாக பெரும்பாலானோர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கின்றனர். நாம் தற்பொழுது அதாவது தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி சட்டத்தரணியூடாக உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளோம்.

ஜுன் மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்ற விடயத்தை. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான தினத்தை குறிப்பிடுவதில் சட்ட ரீதியிலான தடை ஏற்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழு இதற்காக வேறொரு தினத்தை குறிப்பிடும்.

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக முடிந்தவரையில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் விருப்பமாகும். இந்த தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைக்கும் தேவை.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை. ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றமொன்று இடம்பெற வேண்டும் என்பது அத்தியாவசியமாகும் என்பதை ஆணைக்குழு மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றது. இதன் மூலம் நாம் இப்பொழுது மேற்கொண்டு வரும் அரசியல் யாப்பு பணிகளை அவ்வாறே மேற்கொள்ளுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...