Main Menu

விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

‘Dampal Daruwo’ என்ற தேசிய அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

புகையிலை, ஆல்கஹால் ஆணைய சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

அண்மையில் அமைச்சர் வீரவன்ச தலைமையில் கறுவாபட்டை சிகரெட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச அறிமுகம் செய்யப்பட்டிருந்த குறித்த சிகரெட்டை வாயில் வைத்திருந்தமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...