Main Menu

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாக வெற்றிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கவலை

வெற்றிலையை கொள்வனவு செய்வதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தராமதமையினால் பல நாற்களாக வெற்றிலை வெட்டப்படாமல் வீணாகிப்போகியுள்ளதாக முல்லைத்தீவு- விசுவமடு விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே வெற்றிலையை விற்பனை செய்வதற்கு ஏதாவது ஒரு தீர்வினை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலிலுள்ள காரணத்தினால் குறித்த பகுதிக்கு வெற்றிலையை கொள்வனவு செய்வதற்கு, வெளிமாவட்டங்களில் இருந்து  வியாபாரிகள் வருகை தர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...