Main Menu

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா-இளவரசி பெயர் நீக்கம்

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அவருடைய உறவினர் இளவரசி ஆகியோர் போயஸ்கார்டக் இல்லத்தில் வசித்து வந்தனர்.

எனவே ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்ல முகவரியிலேயே சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். 2016 சட்டசபை தேர்தலின்போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் இருவரும் சென்று வாக்களித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. இதில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து 2017 பிப்ரவரி மாதம் முதல் 2 பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை. எனவே, 2 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவகமாக மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இப்போது இந்த இல்லத்தில் யாரும் வசிக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி டிவி‌ஷன் 18-ல் போயஸ் கார்டன் இல்ல முகவரி உள்ளது.

இதிலும் சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் இடம் பெறவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...