வவுனியா பம்பை மடுப்பகுதியில் மரத்துடன் வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்!
வவுனியா பம்பைமடுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்பு கேடர்களை ஏற்றிவந்த கென்ரர்வாகனம் பம்பைமடு பகுதியில் வந்துகொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தின்போது வாகனத்தில் பலர் பயணித்திருந்த நிலையில் இருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறுகாயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக பூவசரங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மேலும் படிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்!