Main Menu

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ஆவது நாளாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) குறித்த போராட்டம் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றதோடு பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டம் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...