Main Menu

லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் விபத்தில் காயம் – 13 பேர் வைத்திய சாலையில் அனுமதி

கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின் பகுதி இடிந்து விழுந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரதேசவாசிகள் காயமடைந்த மாணவர்களை கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது மாணவர் ஒருவரின் கால் பலத்த சேதமடைந்துள்ளதாக கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் விசாரணையின் போது தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேன்பிதுனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...