Main Menu

ராஜித்தவின் கைது பிடியாணையை நிறைவேற்றுமாறு நீதிவான் உத்தரவு!

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த பிடியாண‍ையை நிறைவேற்றுமாறு கொழும்பு  பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு சட்டத்தரணியூடாக தாக்கல் செய்த மனுவினை நிராகரித்தே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தங்களை வெள்ளை வேன் சாரதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு வெள்ளை வேன் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும்...