Main Menu

ரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி வெளியேற அறிவுறுத்தல்

இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மாணவர்கள், சுற்றுலாப்பணிகள், தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளவர்கள் போன்ற அனைவரும் அவர்களுக்கு கிடைக்கும் விமான சேவைகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறும் படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிகள் தேவைப்படுமாயில் வெளியுறவுத்துறை இணையத்தளமூடாக தொடர்புகொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல உலக நாடுகள் இரஷ்யா மீது பல தடைகளை விதித்து வரும் நிலையில், நேற்றில் இருந்து இரஷ்ய விமானங்களுக்கான வான்வழி பாதைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரஷ்யாவில் தங்கியிருப்பது ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...