Main Menu

யாழ்தேவி ரயில் தடம் புரள்வு – வடக்கிற்கான சேவைகள் பாதிப்பு

யாழ்தேவி ரயில் தடம் புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்கமுவ – அம்பன்பொல ரயில்  நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை சீராக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் விரைவில் குறித்த ரயில் தடங்களில் சேவை இடம்பெறும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...