யாருக்கு ஆதரவு? – இதொகாவின் முடிவு இன்று
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
தோட்டத்தொழிலாளர்களின் 32 பிரச்சினைகளை முன்னிறுத்தியே, எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை இதொகா எடுக்கவுள்ளது.