Main Menu

முழுமையாக தடுப்பூசி போடப் பட்டவர்களுக்கான தனிமைப் படுத்தல் காலத்தை குறைக்கும் பிரான்ஸ்

முழுமையாக தடுப்பூசி செலுத்திய நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறினார்.

இருப்பினும் ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாக்கினால் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என்றும் அறிவித்தார்.

இதேநேரம் கொரோனா தொற்று உறுதியான நபருடன் நெருங்கிய தொடர்புடைய முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை என்றும் அறிவித்தார்.

இதேவேளை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் இருக்கும் என்றும் அதே விதிமுறைகளின் கீழ் ஏழு நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேர வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

பகிரவும்...