Main Menu

முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை சேருநுவர பகுதியில், 36 வயதுடைய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர், நேற்று முன்தினம் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, கிளிநொச்சி அம்பாள்குளத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, தன்னியக்க துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கிகள்-3, ரி-56 மற்றும் கைத்துப்பாக்கி ரவைகள், சி-4 வெடிபொருள், கைக்குண்டுகள், வெடிக்க வைக்கும் கருவிகள், கத்தி, புவிநிலைகாட்டி, ஒளிப்பதிவுக் கருவி, தொலைகாட்டி, மடிகணினி, அலைபேசிகள், விடுதலைப் புலிகளின், ரிசேட் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த வீட்டில் இருந்த, திருகோணமலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

பகிரவும்...