Main Menu

முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர்; அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.  பிரான்சில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

இரட்டை இயந்திரங்களைக் கொண்ட அதிநவீன போர் விமானமான இந்த ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டதாகும்.

இதேவேளை இந்த ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்நறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...