Main Menu

31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செல்வநாதன் நாகலிங்கம் (27/05/2023)

தாயகத்தில் வடலியடைப்பைச் சேர்ந்த செல்வநாதன் நாகலிங்கம் (ஓய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர், எழுதுவினைஞர் மாவட்ட செயலகம், கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் 31 ம் நாள் (27/05/23) நினைவஞ்சலியும், ஆத்மசாந்தி வேண்டலும், அந்தியேட்டி கிரியை நிகழ்வும் இந்துமத ஆச்சார அனுஷ்டானங்களுடன் அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்னாரின் நல்லாத்ம சாந்திக்காக அவரது ஆருயிர்க் குடும்பத்தினர் அன்பு மனைவி திருமதி.கோமதி செல்வநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியை யாழ். மத்திய கல்லூரி யாழ்ப்பாணம்) மகள் ஜயந்திமதி செல்வநாதன் ஆசிரியை (யா/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்). மகள் ஜனனி அதிபர் (கிளிநொச்சி, முரசுமோட்டை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை கிளிநொச்சி) மகன் பிரணவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் கணனி மற்றும் வேலைகள் பிரிவுப் பொறுப்பாளர்,போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் ) ஆகியோர் அவரது நல் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றனர். இவர்களுடன் அவரது சகலர்கள், மைத்துனிமார் , மைத்துனர்மார் , பெறாமக்கள்,பேரக்குழந்தைகள், பூட்டக் குழந்தைகள், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர் நண்பர்கள், ஊரவர் அனைவரும் அவராத்ம சாந்திக்கு வேண்டுகிறார்கள்.

“ஓம் சாந்தி! ஓம்சாந்தி! ஓம் சாந்தி”!

அமரர். செல்வநாதன் நாகலிங்கம் அவர்களுடைய 31ம் நாள் நினைவஞ்சலியில் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் பிரார்த்திக்கின்றோம்.

TRT தமிழ் ஒலி வானொலியின் இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அவரது அன்பு பிள்ளைகள் ஜயந்தி, ஜனனி, பிரணவன்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...