Main Menu

மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்

இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். 

மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும்,  சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அதே போல், அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்வதற்காக சிலாபம் பகுதியில் தங்கியிருந்ததாக 12 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வாழைச்சேனை, தொடுவா, கல்குடா, வெளிக்கண்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இருவேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ள நிலையில், இவ்வாறான படகு பயணங்கள் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

பகிரவும்...