Main Menu

மாகாண சபைத் தேர்தலுக்கு அழைப்பு – கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த அரசாங்கம் முடிவு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு உடன்பட, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் மற்றும் 13 வது திருத்தம் தொடர்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் முன்வைத்த திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் தேர்தலை நடத்துவது தொடர்பான முடிவுக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு தேர்தலை நடத்துவதற்கான முடிவுக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கட்சித் தலைவர்களின் ஒருமித்த கருத்துடன் இந்த திட்டம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பகிரவும்...