Main Menu

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட மல்வத்து தரப்பின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதன்போது மகாநாயக்க தேரர், செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.