Main Menu

மரண தண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக  மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்  என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு  இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவரும் தாங்கள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அச்சப்படும்  நிலை காணப்படக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மரணதண்;டனை கைதிகளிற்கு கிடைத்துள்ள தற்காலிக ஆறுதல் நிரந்தரமானதாக மாறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனைகளை மாற்றி தண்டனை குறைப்பை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கையில் காணப்பட்ட பரந்துபட்ட எதிர்ப்பின் பின்னணியிலேயே நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது என பிராஜ் பட்னாயக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீதிமன்றங்களிலும் ஊடகங்களிலும் வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான எதிர்ப்பு காணப்பட்டது என தெரிவித்துள்ள பிராஜ் பட்நாயக் சர்வதேச அளவிலும் எதிர்ப்பு காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்த குரல்களை செவிமடுப்பதும் மனித உரிமைகளை மதிப்பதும் மரணதண்டனை நிறைவேற்றம் தொடர்பான இலங்கையின் தசாப்தகால நிலைப்பாட்டினை தொடர்வதும் ,மரணதண்டனையை முற்றாக இல்லாமல் செய்வதுமே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...