Main Menu

பௌத்த பிக்குகளை அவமதிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது – ஜனாதிபதி

எந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் பௌத்த பிக்குகளை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாதுகோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி கொள்ளைக்குப் பொறுப்பான அனைத்து பிரதிவாதிகளும் தற்போது இனங்காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தான் சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.
சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிரான தெளிவான சாட்சிகள் உள்ளதாகவும் சட்டத்திற்கு  அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு அரச நிர்வாகத்தில் தண்டனைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தண்டனைக்கு பயப்படுவதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து சிறந்ததொரு நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...