Main Menu

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை

வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

அலுவலகம் திறக்கப்பட்ட போது, அன்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், அரசியல்துறைத் தலைவர் சிவகுமார், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

டெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...