Main Menu

போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி சுகாதார விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது தங்களது தொழிற்சங்க நடவடிக்கையில் குறிக்கோள் இல்லை என பொது சுகாதார வைத்திய பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

பகிரவும்...