Main Menu

பொலிஸார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் – உறவுகள் ஆதங்கம்

இனிவரும் காலங்களில் பொலிஸார் தாக்கினால் தாமும் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டமையால் எமது நீதிக்கான போராட்டம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக எம்மை தாக்கினால் ஒரு கட்டத்தில் நாங்கள் பொறுமை இழந்து திரும்ப தாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பொலிஸார் தம்மை தாக்கிய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றின் கவனத்திற்கு எவரும் கொண்டுசெல்லவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பகிரவும்...