Main Menu

பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்தும் மோசமடைகின்றது – ஐ.தே.க. கவலை

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தஅக்கட்சியின் உதவி பொதுச் செயலாளர் ருவான் விஜேவர்தன, தவறு செய்பவர்களைப் பாதுகாக்க நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் சட்டத்தின் ஆட்சியை முற்றாக புறக்கணிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என்றும் முக்கிய அரசாங்க பிரமுகர் ஒருவர் சமீபத்தில் தேர்தல் சட்டங்களையும் போக்குவரத்து விதிகளையும் மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குருநாகலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தை தரைமட்டமாக்கிய நபர் தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கிராமப்புற மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் விவசாயிகளின் அவலநிலையை புறக்கணித்துள்ளதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.

பகிரவும்...