Main Menu

புனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் மீது சுமார் 60 அடி நீள சுவர் விழுந்ததால் குடிசைகள் சேதமடைந்தன. சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த கார்களும் பள்ளத்தில் விழுந்தன. இதனால், குடிசைகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் குடிசைகளில் வசித்த மக்கள் 15 பேர் இறந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை பெய்ததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், இதன்மூலம் அந்த சுற்றுச்சுவரை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமாக பணி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய உதவிகளை வழங்கும் என்றும் கலெக்டர் கூறினார்.

பகிரவும்...