Main Menu

புதிய தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் இன்று!

ஐக்கியத் தேசியக் கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்காக இதற்கு முன்னதாக பல தடவைகள் செயற்குழு கூடியிருந்த போதிலும் எந்தவிதமான தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக முடிவு எட்டப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் செயற்குழுவில் தெரிவு செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...