Main Menu

பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

130 கொள்கலன்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், 133 கொள்கலன்ள் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியிலும் வைக்கப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்கள் இதுவரை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பட்டன.

இதனையடுத்து, பிரித்தானியாவில் இருந்து 263 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கு இலங்கை அரசாங்கம் 1.69 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியது.

Basel சாசனத்தின் கீழ் இலங்கை வழக்கு தாக்கல் செய்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...