Main Menu

பிரான்ஸில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட இருவர் கைது

பிரான்ஸின் – வால் டி ஓயிஸ் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது வீட்டில் இந்த கஞ்சா பொதிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 51 வயதுடைய பெண் ஒருவரும் அவருடன் சேர்ந்து  26 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளுக்குப் பின், நேற்று முன்தினம் அவர்கள் பொன்டோயிஸ் நகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த 51 வயதுடைய பெண் பெஸோன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னரே அவரது வீடு சோதனையிடப்பட்டு, கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...