Main Menu

பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 339பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 62பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 10ஆவது நாடாக மாறியுள்ள பிரான்ஸில், இதுவரை ஆறு இலட்சத்து 91ஆயிரத்து 977பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 32ஆயிரத்து 583பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 58ஆயிரத்து 566பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 448பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 828பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...