Main Menu

பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு அனைத்துப் பாதைகளும் மூடப்படும்!

இன்று நள்ளிரவிலிருந்து பிரித்தானியாவில் இருந்து வரும்  அனைத்துப் போக்குவரத்துக்களும், பயணிகள், பொருட்கள் என, தரைப்பாதை, வான்பாதை, கடற்பாதை, இருப்புப் பாதை என அனைத்து வழிகளும் மூடப்படுவதாகப் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடந்த அவசரப் பாதுகாப்புச் சபையின் முடிவில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதற்கட்டமாக இந்தத் தடையானது அடுத்த 48 மணித்தியாலங்களிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிற்கும் எழுந்துள்ளது.

பகிரவும்...